உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.
தமிழ்வழிபாடு
இம்மையமானது திருமந்திரத் தமிழ்மாமணி திரு.மு.பெ.சத்தியவேல் முருகன் அவர்களை நிறுவனர், இயக்குனர், ஆசிரியராகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழில் வழிபாடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிக்கிறது.
திருமணம், நிச்சயதார்த்தம், திருவடிப்பேறு முதலிய வாழ்வியல் சடங்குகள் மற்றும் குடமுழுக்கு, மண்டலாபிடேகம் முதலியவற்றைத் தூய செந்தமிழ் மாமறைகளினல் ஆற்றுவதற்குப் பயிற்சியளிக்கிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப் பெறுகிறது.
அ. குறுகியகால தமிழ் வழிபாட்டுப் பயிற்சித் திட்டங்கள்
பயிற்சித் திட்டம் 1: சைவ அனுட்டானமும், தீக்கையும் 2 நாட்கள்
பயிற்சித் திட்டம் 2: திருமணம் முதலான வாழ்வியல் சடங்குகள் 5 நாட்கள்
பயிற்சித் திட்டம் 3: திருக்குடமுழுக்கு மற்றும் மண்டலாபிடேகம் 7 நாட்கள்
ஆ. நீண்டகாலப் பயிற்சித் திட்டம்
இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தமிழறிவு, சைவ சித்தாந்த அறிவு, ஆகம அறிவு,
செய்முறை அறிவு ஆகிய அனைத்திற்கும் அடிப்படைப் பாடத்திட்டங்கள் உண்டு. இந்த
அடிப்படைகளுடன் முறையாகக் கற்றுத்தேர விரும்புவோருக்கு அவரவர் தகுதிப்படி
ஆறு மாதம் அல்லது ஓராண்டுப் பயிற்சியும், பயிற்சி முடிவில் சான்றிதழும் வழங்கப்படும்.
கட்டண விவரம் அணுகுவோருக்கு அறிவிக்கப்படும்.
மைய நிறுவனர் (ம) இயக்குநர் செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனர், B.E.,M.A.,M.Phil.
நிகழ்வுகள்

18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை
சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

18th year - Thirumanthiram Recital (3rd Round)
A Three Day Program :: 2nd - 4th Jan 2009
Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!
படைப்புகள்
குற்றக்கழுவாய்
(பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும்
அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ
வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன்
பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும்
"சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.
வண்டமிழில்
வாழ்வியல் சடங்குகள் :
நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.
சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.
திருமுருகாற்றுப்
படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம்
ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச்
சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

